திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

Date:

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும் சாதனை படைத்துள்ளார்.

பொலிஸ் துறையில் சிறப்பான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய இவர், சிங்களமும் தமிழும் சிறப்பாக பேசும் பன்மொழிப் புலமைமிக்க அதிகாரியாக விளங்குகிறார். மேலும், அவரின் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன், மனிதநேயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அதிகாரியாக மக்கள் மத்தியில் பெருமை பெற்றுவருகின்றார்.

முஹம்மது சுல்தான் நஜீம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமை துறையில் பட்டப்பின் டிப்ளோமாவை (Executive Diploma in Human Rights) வெற்றிகரமாக முடித்துள்ள இவர், தனது அறிவியல் மற்றும் தொழில்முறை தேர்ச்சிகளுக்காக Crime Scene Management, Environmental Law, Public Order Management, Miscellaneous Complaint Handling முதலான சான்றிதழ் பாடநெறிகளையும் நிறைவு செய்துள்ளார்.

பொலிஸ் துறையில் அவரது தனித்துவத்தை நிலைநாட்டும் இளம் அதிகாரியான முஹம்மது சுல்தான் நஜீம் அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்