26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

வெல்லவாய பொலிஸ் பிரிவின் செல்லபாவ பிரதேசத்தில் அமைந்திருந்த கடை ஒன்றில் சட்டவிரோத மதுபான தொழிற்சாலை இயங்கியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் சுற்றிவளைப்புச் செய்த பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த கடை, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் போர்வையில் செயல்பட்டு வந்ததாகவும், அதனுள் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சோதனையின் போது, 57 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள், கோடா மற்றும் பீப்பாய் சுருள்கள், மதுபானம் காய்ச்சும் உபகரணங்கள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சமூக சீர்கேட்டை வெளிப்படுத்தும் குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர், வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment