26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பசிலின் முறைகேடுகள் பற்றி சிஐடியில் முறையிட்ட வீரவன்ச

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச தொடர்பில் முன்னர் தெரிவித்த கருத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக முறைப்பாடு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) நேற்று (3) வருகை தந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சட்டத்தரணியாக ஆஜராகியிருந்த நிலையில், சிஐடிக்கு வெளியில் பசில் ராஜபக்ச தொடர்பில் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பசில் ராஜபக்ச தொடர்பில் தாம் முன்னர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான எழுத்துமூலத் தகவல்கள் அனைத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பசில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளதாகவும் வீரவன்ச தெரிவித்தார். அவர் வழங்கிய தகவலில் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள சொத்துக்கள் தொடர்பான தேவையான தகவல்களை விரைவில் அமெரிக்காவிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களைச் செய்தவர்களை பொய்யாகக் கைது செய்வதற்குப் பதிலாக உண்மையான திருடர்களை விசாரிக்க அரசாங்கம் உத்தேசித்தால், பசில் ராஜபக்சவின் சொத்துக்களை விசாரிக்குமாறு அரசாங்கத்திடம் கூற விரும்புவதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment