தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Date:

யாழ் சாவகச்சேரி தனங்களிளப்புப்பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையினரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில்-

தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

முறைப்பாட்டின் அடிப்படையில் உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்க்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர்.

பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவ கச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால் 77 927 3042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார்

spot_imgspot_img

More like this
Related

மியான்மரில் சடலமாக மீட்கப்பட்ட அமெரிக்க தூதர்: தாய்லாந்து பெண் தடுப்புக்காவலில்

மியான்மரின் மிகப்பெரிய நகரத்தில் ஒரு அமெரிக்கத் தூதர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம்

மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus...

600 பொலிசாரின் நினைவு நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்