நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Date:

பண்டிகைக் காலத்தில் பயணிகள் பஸ்களை பரிசோதிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நாளைய தினம் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற பேருந்துகள் ஆகியவை குறித்து சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 119 அல்லது 1927 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக பொலிசாருக்கு தெரிவிக்குமாறும் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வட்ஸ்அப் வீடியோக்களை பிரதேச போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

வானில் மின்னல் தாக்கியது; ஸ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவில் அவசர தரையிறக்கம்

மின்னல் தாக்கியதால் சிட்னி நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக கட்டுநாயக்காவில்...

உலகக்கோப்பை கோலாகலமாக தொடங்கியது!

வியாழக்கிழமையன்று, உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் முதல் போட்டியின் முன் மெக்சிகோ...

வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் ஒரு அமைதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்