நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Date:

பண்டிகைக் காலத்தில் பயணிகள் பஸ்களை பரிசோதிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நாளைய தினம் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற பேருந்துகள் ஆகியவை குறித்து சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 119 அல்லது 1927 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக பொலிசாருக்கு தெரிவிக்குமாறும் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வட்ஸ்அப் வீடியோக்களை பிரதேச போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்