நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Date:

பண்டிகைக் காலத்தில் பயணிகள் பஸ்களை பரிசோதிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நாளைய தினம் போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற பேருந்துகள் ஆகியவை குறித்து சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 119 அல்லது 1927 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக பொலிசாருக்கு தெரிவிக்குமாறும் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வட்ஸ்அப் வீடியோக்களை பிரதேச போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 வருட சிறைத்தண்டனை

வட கொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பியதற்காக, தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி...

நீதிபதியை சாட்சியாக பெயரிட்டதை மீளப்பெறும் சட்டமா அதிபர் திணைக்களம்

அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது அலுவல் பணிகளின் போது...

FIFA WC 2026 | முதல் போட்டியில் 3 ரெட் கார்ட்கள்: தென்னாபிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

2026 கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கப் போட்டியில் தொடரை இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்