நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

Date:

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய புவியியல் மையத்தின் கணக்கீட்டின்படி, 4.8 ரிச்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்படுத்தியதோடு, அட்சரேகையின் 29.17 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.59 கிழக்கில் நிலை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நேபாளத்தில், கடந்த 2015ல் 7.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.

இந் நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதூது, பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்