பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

Date:

திருகோணமலை மாவட்ட பெண் உரிமை செயற்பாட்டாளர்களால் இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டது.

இதில், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான (CEDOW) சமவாயத்தை இலங்கையில் சட்டமூலமாக உருவாக்கல் தொடர்பிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதோடு, புதிய பதில் சட்டமூலங்களை கொண்டுவராமல் இருப்பதை உறுதி செய்தல் தொடர்பிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல் தொடர்பிலும் பல கோரிக்கைகளை விடுத்திருந்தனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் பெண்களை விசாரணைகளுக்கு அழைக்கும் செயல்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், சம்பூரில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டதை குறித்து பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்