சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி நவம்பர் 04ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.



