புதிய பாராளுமன்றத்தில் 4 முக்கிய நியமனங்கள்

Date:

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ரிஸ்வி சாலிஹ் மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி ரிஸ்வி சாலியின் பெயர் அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டது. அமைச்சர் சரோஜா பால்ராஜ் அவர்களால் வழிமொழியப்பட்டது.

இதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகரவின் பெயரை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி முன்மொழிந்தார்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சபையின் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டார்.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்