29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வழக்கில் சாட்சியமளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் ர் இந்த பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சுகயீனம் இருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக, அவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பையும் பரிசீலித்த நீதவான், சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்து, புகார் விசாரணையை ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!