விமலுக்கு வருத்தம் பார்த்த வைத்தியருக்கு அழைப்பாணை!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக மருத்துவச் சான்றிதழை வழங்கிய பாணந்துறை மருந்தகத்தின் வைத்தியர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (18) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்யும் போதே உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், பிரதிவாதி விசாரணைக்கு வரவில்லை. பாணந்துறை பிரதேசத்தில் உள்ள மருந்தகத்தின் வைத்தியர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, ​​குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு முன்னர் பல தடவைகள் சுகவீனமுற்றிருந்ததாகக் கூறி நீதிமன்றத்தை தவிர்த்திருந்ததை சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நினைவு கூர்ந்தார்.

இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, விசாரணைத் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னரும், பிரதிவாதி நீதிமன்றில் ஆஜராகாத பட்சத்தில், அது நீதி பரிபாலனத்திற்கு பாரிய இடையூறாக அமையும் என உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்சவுக்கு வைத்தியரால் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை சமர்ப்பிக்குமாறு நிரோகா மெடி கேர் மருந்தகத்தின் வைத்தியர் ரொஷான் லியனாராச்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணைக்கு மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவர் எந்தெந்த நாட்களில், எந்த நேரத்தில் சிகிச்சை அளித்தார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆவணங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் நோய் கண்காணிப்பு பதிவுகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், மருத்துவ சிகிச்சை அறிக்கைகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்து அறிக்கைகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று (18ம் திகதி) அழைக்கப்பட்ட போது, ​​சம்பந்தப்பட்ட வைத்தியர் ஆவணங்களை சமர்ப்பிக்காதது குறித்து நீதிமன்றம் வினவியது.

மருத்துவர் வேறொரு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த நீதிமன்ற திகதியில் மருத்துவர் நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று (18ஆம் திகதி) கையளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான ஜனாதிபதி  சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரர் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நிரபராதி என்று கூறினார்.

2010-2014 வரையான 5 வருட காலப்பகுதியில் அமைச்சராக இருந்த போது விமல் அவர்களின் சொத்துக்கள் மற்றும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்