வடக்கு தமிழர்கள் சிங்கள கட்சியில் நம்பிக்கை வைப்பது நல்ல மாற்றம்: ஐ.தே.க மகிழ்ச்சி!

Date:

தென்னிலங்கையில் இருந்து வந்த ஒரு கட்சி மீது வடக்கில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை முதல் தடவையாகக் காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

“நாட்டின் தேர்தல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பான சந்தர்ப்பமாகும். வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டாலும் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள அரசியல் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

வடக்கில் உள்ள மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பதன் மூலம் சுறுசுறுப்பாக ஆட்சியில் இணைந்து கொள்வார்கள் இது நல்ல அறிகுறியாகும்.

இலங்கைக்கு கிடைத்த வெற்றி. இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு தமிழ்த் தலைவர்கள் அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர்கள் தமது சொந்தக் கட்சிகளிலிருந்தே தெரிவு செய்யப்பட்டதாக அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் இருந்த போதும் அவர் தென்னிலங்கையில் இருந்து ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

“போட்டியிடும் போது நாம் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒன்று, நாட்டு மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டனர். பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். சில காரணிகள் குறித்து அவர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. அதற்காக அவர்களைப் பாராட்டுகிறோம். மேலும் இது இலங்கைக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்” என்று அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். “இப்போது அதைச் செய்ய முடியாது என்று அவர்களால் கூற முடியாது. இந்த தருணத்திலிருந்து, 22 மில்லியன் மக்களின் நன்மைக்காக அந்த சக்திவாய்ந்த ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவாலாக உள்ளது.

தாம் நம்பும் அரசியல் தத்துவத்தின்படி, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் சவால்களை வென்றெடுக்க வேண்டும்.

அதற்கு இலங்கை மக்களாகிய நாம் அவர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. இலங்கை மக்களுக்கு கொடுத்த நம்பிக்கையை இலங்கை மக்களுக்கு எப்படி வழங்குவார்கள் என்பதை இலங்கையர்களாகிய நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்