27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யானைக்கூட்டத்துடன் மோதி எரிபொருள் ரயில் விபத்து

வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் மின்னேரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று யானைக் கூட்டத்துடன் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயிலில் 11,000 கேலன் எரிபொருளும், ஏழு டேங்கில் டீசலும், நான்கு டேங்கில் பெட்ரோல் நிரப்பப்பட்டும் இருந்தது. இரண்டு பெட்ரோல் டேங்க்கள் கவிழ்ந்ததால், எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக, சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் ரயிலின் சாரதி மற்றும் நான்கு தொழிலாளர்கள் அதில் இருந்ததாகவும், அவர்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் மின்னேரிய பொலிஸ் பொறுப்பதிகாரி, சிஐ துமிந்த பெரேரா உறுதிப்படுத்தினார்.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கல் ஓயா மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்னேரியா மற்றும் ஹபரணையில் இருந்து விசேட பொலிஸ் பிரிவொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், யானை ஒன்று விபத்தில் பலத்த காயமடைந்துள்ளதாக மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானைக்கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளான எரிபொருள் புகையிரதம் எந்த வேகத்தில் பயணித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக ரயில்வே பொது முகாமையாளர் செயற்பாட்டாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

குறித்த எஞ்சின் 50 முதல் 60 வருடங்கள் பழமையானது. முன்னதாக இந்த இயந்திரங்கள் ஒன்பது எண்ணெய் டேங்கர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை ஏழு எண்ணெய் டேங்கர்களை மட்டுமே கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், எண்ணெய் டேங்கர்களுடன் மலைகளில் பயணிக்கும் போது ரயில்களால் சில வேக வரம்புகள் பராமரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தண்டவாளத்திற்கு அருகில் அல்லது தண்டவாளத்தில் யானைகள் இருப்பதைப் பற்றி ரயில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை அமைப்பு இருக்க வேண்டும்.

இருப்பினும், ரயில்களில் நிலவும் இரைச்சல் காரணமாக ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களுக்குள் இந்த அமைப்பை எவ்வாறு நிறுவுவது என்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை இந்த உபகரணங்களை வழங்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விவாதிக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment