Pagetamil
இலங்கை

17ஆம் திகதிக்கு பின்னர் கன மழை குறையும்

நேற்றைய (14) காலநிலையுடன் ஒப்பிடுகையில் இன்று (15) மற்றும் நாளை (16) மழைவீழ்ச்சியில் சிறிதளவு குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் 17ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது நிலவும் பாதகமான காலநிலை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் கடுமையான காலநிலை காரணமாக நேற்று (14) மாலை மூவர் உயிரிழந்துள்ளதுடன் 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் அதிக சேதம் பதிவாகியுள்ளது.

மில்லனிய, கொலன்னாவ மற்றும் கடுவெல பிரதேசங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பேரழிவு முகாமைத்துவம்) கே.ஜி. தர்மதிலக்க கூறுகையில், “தற்போது 2,470 குடும்பங்கள் 10,369 தனிநபர்கள் 79 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமைத்த உணவு, மருத்துவ உதவி மற்றும் தங்குமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு தினமும் இரண்டு முறை பால் தேநீர் வழங்க அரசாங்கம் மற்றும் பிற குழுக்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தர்மதிலக்க மேலும் தெரிவிக்கையில், “மிகவும் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான கம்பஹா, புத்தளம், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டச் செயலாளர்களுக்கு ரூ.33 மில்லியன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீதமுள்ள மாவட்டங்களுக்கு  ரூ. 84 மில்லியன் ஒதுக்கப்படும்.”

“கூடுதலாக, எங்கள் அமைச்சகம் மேலும் ரூ. 60 மில்லியன் எதிர்கால தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும் கோரிக்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இந்த நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment