30.6 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இலங்கை

வல்வை பாலத்தில் பயங்கரம்… வாகனம் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பழைய இரும்பு சேகரிக்கும் இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர். பாலத்தின் அருகில் பிரேக் பிடித்த போது, வழுக்கிச் சென்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் 21 வயதான பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

மஹிந்த காலத்தை மிஞ்சும் அதிகார ஆட்டம்; யாழில் ஜேவிபி அமைச்சரின் தலைகால் புரியாத பேச்சு: முன்னாள் தவிசாளர் நிரோஷ் பதிலடி!

Pagetamil

அரசியலில் பிக்குகளுக்கென்று தனியானதொரு அணியை உருவாக்கி பௌத்த சிங்கள பேரின வாதத்தை நிறுவனமயப்படுத்தியது ஜே.வி.பி மாத்திரமே!

Pagetamil

மலேசியாவில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞன் பலி

Pagetamil

அம்பன் விபத்தில் குடும்பஸ்தர் பலி

Pagetamil

டிப்பரில் சிக்கி மூதாட்டி பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!