வாகரையில் மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு

Date:

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்

சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை அண்மித்த பகுதியில் மேச்சலுக்காக கட்டப்படுவது வழக்கமாகும்.

நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக அவற்றுள் 4 மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. அத்துடன் வாழைச்சேனையில் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

கிழக்கில் தற்போது பருவபெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

– க.ருத்திரன்.-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்