வாகரையில் மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு

Date:

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்

சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை அண்மித்த பகுதியில் மேச்சலுக்காக கட்டப்படுவது வழக்கமாகும்.

நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக அவற்றுள் 4 மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. அத்துடன் வாழைச்சேனையில் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

கிழக்கில் தற்போது பருவபெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

– க.ருத்திரன்.-

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்