எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது.
மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் செயற்பட சமத்துவக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, யாழ் மாவட்டத்தில் மு.சந்திரகுமார் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சிக்கு 5 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.