பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான நல்லூர் கந்தன் வீதித்தடைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

Date:

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் போலீஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள் ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து தமத மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்