26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

நீரில் மூழ்கியதாலேயே இந்திய மீனவர் உயிரிழந்தார்!

கடலில் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகினை இலங்கை கடற்படை கைதுசெய்ய முற்பட்ட பொழுது இந்திய படகுடன் இலங்கை கடற்படைப்படகு மோதியதில் இந்திய மீனவரின்படகு கடலில் மூழ்கியது.

இந்நிலையில் குறித்த மீன்பிடி படகிலிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் கடலில் மூழ்கினர்.

இதனையடுத்து மூன்று மீனவர்கள் உடனடியாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதோடு ஒருவர் ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மாயமான மற்றுமொரு மீனவரை இந்திய இலங்கை கடற்படை தேடி வருவதாக இலங்கை கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவனால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்நிலையில் குறித்த மீனவர் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடபட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருவரையும் யாழ் போதான வைத்தியசாலையில் வைத்து யாழ் இந்திய துணை தூதுவர் சாய்முரளி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் சடலம் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment