27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

இந்திய யுவதியை இரவு விடுதியில் பாலியல் துன்புறுத்தியதாக கடற்படை அதிகாரி மீது குற்றச்சாட்டு!

பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில், கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவரால், இந்தியப் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையை கைவிட அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

ஜூன் 20 ஆம் திகதி விடியற்காலை, இரவு விடுதியில் இலங்கை நண்பர் ஒருவருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, ​​கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் பின்னாலிருந்து வந்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இந்திய யுவதி பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னை துன்புறுத்திய மூத்த கடற்படை அதிகாரி கடற்படைக்கு சொந்தமான காரில் பலருடன் இரவு விடுதியில் இருந்து வெளியேறியதாக இந்திய யுவதி புகார் அளித்துள்ளார். வாகனத்தின் பதிவு எண்ணையும் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

அதன்படி, அவருக்கு நீதிமன்ற மருத்துவ படிவம் காவல்துறையால் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. சிரேஷ்ட கடற்படை அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், தான் இந்த துன்புறுத்தலை செய்யவில்லை என அவர் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரும் அவதானம் செலுத்தி நாட்டிலுள்ள உயர்ஸ்தானிகர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறித்த இரவு விடுதியின் பாதுகாப்பு கமெராக்களை பரிசோதிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை மூடி மெழுக அதிகாரம் படைத்தவர்களின் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

east tamil

இந்திய உயர் ஸ்தானிர் – மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

east tamil

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா முரண்பாடு

east tamil

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தம் – அரசாங்கம் தீர்மானம்

east tamil

பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

east tamil

Leave a Comment