இரசாயனக்கலவை அழகு சாதனங்களால் ஆபத்து!

Date:

சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒப்பனை சிகிச்சைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகமயப்படுத்தப்படுவதனால் பாரிய பொது சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (10) வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் இரசாயன கலவை மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை பரிசோதிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் போதிய ஆய்வுகூட வசதிகள் இல்லையெனவும் இந்த சங்கம் கூறுகிறது.

இந்த நிலையில், ஆய்வுகூட வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் இந்த பூச்சுகளை பரிசோதிக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்