26.2 C
Jaffna
March 14, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணம்: அக்காவின் கணவன் கொடூரம்… இளைஞன் பலி!

அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குவில், தாவடி  பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த 2ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

வரதராசா நியூட்சன் (23) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞனின் அக்காவின் கணவருக்கும்- இளைஞனின் தந்தைக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் மீது, அக்காவின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார். இளைஞனின் தந்தை மீதும் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார்.

இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து, அக்காவின் கணவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்தனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவத்தில் மேலுமொருவர் கைது

Pagetamil

யாழில் படம் காட்ட முயன்று வாங்கிக்கட்டிய ஜேவிபி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!