‘வெளிநாடுகள் புரிந்துகொள்ள பொதுவேட்பாளரை நிறுத்தப் போகிறோம்’: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!

Date:

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கிளிநொச்சி மாவட்டத்துக்கான நிர்வாக தெரிவு கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று 25.05.2024 நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், ரெலோ கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது –

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க கட்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. கட்சியை பலப்படுத்துவற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்

அடுத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதாக கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருக்கின்றோம். சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.

யுத்தம் முடிந்து பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றம். வருகின்ற ஜனாதிபதிகளும் பாராமுகமாக இருக்கின்றனர்.சிங்கள தலைவர்களும் வெளிநாடுகளும் புரிந்து கொள்வதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளோம் என்றார்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது-

ஏற்கனவே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கிய வேலைத்திட்டங்களையே திறந்து வைக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வு. தேர்தலை வருகின்ற நிலையில் வாக்கை பெறும் நோக்கிலும் வருகை தந்துள்ளார் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்