போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற திருமலை இளைஞன் கைது!

Date:

போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரது பயண ஆவணங்களில் சந்தேகமடைந்து நடத்தப்பட்ட மேலதிக பரிசோதனையில், அவர் போலி ஆவணங்களுடன் செல்ல முயன்றது தெரிய வந்தது.

போலியான இலங்கை கடவுச்சீட்டை இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்திற்கு அனுப்பி அவர்களிடம் சிக்காமல் இத்தாலிய வதிவிட விசாவை பெற்றுக்கொண்டமை தெரிய வந்துள்ளது.

இந்த போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலிக்குள் நுழைந்தவுடன் இந்த ஏற்பாடுகளை ஏற்பாடு செய்த தரகருக்கு 95 இலட்சம் ரூபா பணம் தருவதாக உறுதியளித்ததன் பேரில் தான் இந்த விமானத்தை திட்டமிட்டதாக குடிவரவு அதிகாரிகளிடம் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்