கடந்த வியாழன் (பெப்ரவரி 15) புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனியார் அமெரிக்க விண்கலம் தென் துருவத்திற்கு அருகே நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி வரலாற்றை உருவாக்கியது.
கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் நிலவுப் பயணம் வெற்றியடைவது இதுவே முதல்முறை என்பதால் இது வியக்கத்தக்க வெற்றியாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, “சேலஞ்சர்” என்று பெயரிடப்பட்ட அமெரிக்க சந்திர தொகுதி டிசம்பர் 11, 1972 அன்று சந்திரனின் டாரஸ்-லிட்ரோ பகுதியில் தரையிறங்கியது.
நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக விண்கலங்களும் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவர்களையும் அனுப்பி ஆய்வு நடைபெற்று வருகிறது. அமெரிக்கா நிலவுக்கு மனிதனையே அனுப்பி சோதனை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாசா உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை தென் துருவம் அருகே தரையிறக்கியுள்ளது.
இந்த விண்கலத்தில் இருந்து சிக்னல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.



