யாழ்ப்பாணம் நகரில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது
பொலிசார் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட 23 இலட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் நகையையும் 2 இலட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்,
கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.



