பொதுமன்னிப்பு: ஒரு வாரத்தில் இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளர் நியமனம்!

Date:

இலங்கை போக்குவரத்துசபையின் வடபிராந்திய முகாமையாளராக நியமிக்க தகுதி வாய்ந்த தமிழ் பேசுபவர்கள் இருந்தாலும், அவர்கள் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளதால் இழுபறியேற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இன்று (4) இ.போ.சவின் கோண்டாவில் சாலையில் ஊழியர்கள் மத்தியில் தெரிவித்தார்.

எனினும், தமிழ் பேசும் ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்று, தண்டப்பணம் செலுத்துவதால், அவருக்கு மன்னிப்பளித்து, வடபிராந்திய முகாமையாளராக நியமிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய முகாமையாளரை ஒரு வாரத்தில் நியமிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, இ.போ.ச உத்தியோகத்தர் ஒருவர், அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். சில குற்றச்சாட்டுக்களில் சிக்கி, மேன்முறையீடு செய்தவர்கள், பிராந்திய முகாமையாளருக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருந்தபடி, பிராந்திய முகாமையாளரின் கடமைகளை ஆற்றலாமா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்காமல், சிரித்தபடி சென்றார்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்