தேசிய அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்படக் கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 400 ரூபாவாக உயர்த்தி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்து, தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் புகைப்படங்களுக்கான அதிகபட்ச கட்டணமாக 150 ரூபாவாக நிர்ணயம் செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், புதிய கட்டணம் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



