டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவ, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகிய நால்வரும் விரைவில் சஜித் பிரேமதாச அணியில் இணையவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் இரு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
டலஸ் அழகப்பெரும உட்பட பலர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால், தொடர் நிபந்தனைகளுடனும் வேலைத்திட்டத்துடனும் கூட்டணிக்குள் பிரவேசிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதில் அர்த்தமில்லை என்று காட்டியுள்ளனர்.
சுதந்திர மக்கள் சபையின் எம்.பி.க்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை நாவலவில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி நாலக கொடஹேவ ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூடிய விரைவில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதன்படி அந்த நான்கு எம்பிக்களும் விரைவில் சஜித் அணியில் இணைய உள்ளனர்.
சுதந்திர மக்கள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 எம்.பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.



