26.3 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இலங்கை

ஹந்தான மலையில் தொலைந்த பல்கலைக்கழக மாணவர்கள்

ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் குழுவினரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை சுமார் 180 மாணவர்கள் ஹந்தானை மலைத்தொடரில் ஏறுவதற்காக பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

180 மாணவர்களில் சுமார் 150 பேர் கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹந்தான மலையிலிருந்து மாலையில் திரும்பும் போது கடும் மழை மற்றும் இருள் சூழ்ந்துள்ளமையினால் மாணவர்கள் வீதியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன ஏனைய மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!