Pagetamil
இலங்கை

30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: பெண் பலி!

தெனியாய நாதாகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியென்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட இருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.

பெவரலிய, நாதாகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தெனியாய, ஒலகந்த, தெனியாய தோட்டத்தில் வசிக்கும் கந்தசாமி சந்திரா (வயது 47) என்ற  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்புலன்ஸ் மூலம் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரின் சாரதி மற்றும் காயமடைந்த மற்றைய இரு பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெனியாய நதாகல வீதி மிகவும் குறுகலான மற்றும் செங்குத்தான வீதியாக காணப்படுவதாகவும், விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Pagetamil

ட்ரம்ப் விதித்த அதிக வரி: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

Pagetamil

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 4 பேர் பலி

Pagetamil

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!