27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

244 குடும்பங்கள் இடம்பெயர்வு

கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தின் இருபுறமும் உள்ள 244 குடும்பங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பிரகாரம் உடனடியாக அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஜே.பிரியங்கிகா தெரிவித்தார்.

கொஸ்லந்த மீரியபெத்தவை சேர்ந்த நூற்று நாற்பத்து நான்கு குடும்பங்கள் கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலைக்கும், மஹகந்தவில் இருபத்தி மூன்று குடும்பங்கள் மல்வண்ண தேயிலை தொழிற்சாலைக்கும், திபுல்கசமுல்லவை கொஸ்லந்த சிங்கள கல்லூரிக்கும், கொஸ்லந்த தமிழ் கல்லூரிக்கும் 81 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் யானைகள் சுற்றித் திரிவதால், மஹகந்த வத்தை பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம்களில் தற்போது 768 பேர் இருப்பதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர்  மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!