244 குடும்பங்கள் இடம்பெயர்வு

Date:

கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தின் இருபுறமும் உள்ள 244 குடும்பங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பிரகாரம் உடனடியாக அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஜே.பிரியங்கிகா தெரிவித்தார்.

கொஸ்லந்த மீரியபெத்தவை சேர்ந்த நூற்று நாற்பத்து நான்கு குடும்பங்கள் கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலைக்கும், மஹகந்தவில் இருபத்தி மூன்று குடும்பங்கள் மல்வண்ண தேயிலை தொழிற்சாலைக்கும், திபுல்கசமுல்லவை கொஸ்லந்த சிங்கள கல்லூரிக்கும், கொஸ்லந்த தமிழ் கல்லூரிக்கும் 81 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் யானைகள் சுற்றித் திரிவதால், மஹகந்த வத்தை பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம்களில் தற்போது 768 பேர் இருப்பதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர்  மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்