Pagetamil
முக்கியச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு மீண்டும் முயற்சி: திறைசேரியிடம் பணம் கோரியது!

அரசாங்கம் எதிர்கொள்ள அச்சமடைந்து ஒத்திவைத்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலுக்கு பணம் கோரும் திருத்தப்பட்ட அட்டவணையை திறைசேரிக்கு அனுப்பியுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, தேர்தலை நடத்துவதற்கு, முதலில் 2.2 பில்லியன் ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்றும், மீதமுள்ள தொகையை மூன்று மாதங்களுக்குள் விடுவிக்க முடியும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான மற்றொரு முயற்சியாக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமை தற்போது முன்னேற்றமடைந்துள்ளதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான நிதியைப் பெற புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் முதல் பெரிய முயற்சி இதுவாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திறைசேரிக்கு வழங்கப்பட்ட விபரத்தின் படி,
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளுக்காக தேர்தலை நடத்துவதற்கு ரூ. 1.1 பில்லியன் தேவைப்படும்-தேர்தலுக்கு அழைப்பு விடுத்த முதல் 15 நாட்களில் ரூ. 100 மில்லியன், அடுத்த 15 நாட்களில் மற்றொரு ரூ. 500 மில்லியன் மற்றும் அடுத்த 20 நாட்களில் ரூ. 500 மில்லியன்.

மேலும், காவல்துறைக்கு ரூ. 400 மில்லியன், அரசு அச்சகத்துக்கு ரூ. 200 மில்லியன், தபால் திணைக்களம் ரூ.500 மில்லியன் வாக்கெடுப்புக்கு முன் தேவைப்படும்.

அதன்படி, தேர்தல் நடத்தப்படும் வரை ரூ.2.2 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது. மீதமுள்ள ரூ.6.8 பில்லியன் தேர்தலுக்குப் பிறகு தேவைப்படும்.

மீதமுள்ள பணத்தை செலுத்த மூன்று மாத கால அவகாசத்தை ஆணைக்குழு வழங்கியுள்ளது. முதல் மாதத்தில் ரூ. 1.9 பில்லியன்; இரண்டாவது மாதத்தில் ரூ. 1.5 பில்லியன்; மூன்றாவது மாதத்தில் ரூ. 1 பில்லியன் வழங்க வேண்டும்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு மற்ற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை வருமாறு: காவல்துறைக்கு ரூ.1 பில்லியன், அரச அச்சகத்திற்கு ரூ.300 மில்லியன், தபால் திணைக்களத்திற்கு ரூ. 700 மில்லியன் மற்றும் ஏனைய துறைகளுக்கு ரூ.400 மில்லியன் செலுத்த வேண்டும்.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெறவிருந்த தேர்தல்கள் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டன. திறைசேரியில் நிதி கிடைக்காத காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக அரசு காரணம் கூறியது. எனினும், ஐ.தே.க- பொதுஜன பெரமுன அரசு தேர்தல் அச்சத்தினால் ஒத்திவைத்ததாக நோக்கர்கள் தெரிவித்தனர். தற்போது, தேர்தல் முறை மாற்றம் என்ற பெயரில் ஏனைய தேர்தல்களையும் தள்ளிவைக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் நடக்காது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

Pagetamil

ஏப்ரல் 21 இன் முன் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் பலர் அம்பலமாவார்கள்: ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!