நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நசீர் அஹமட், பின்னர் அமைச்சர் பதவிக்காக கட்சி தாவி, அரசை ஆதரித்திருந்தார்.
அவரை கட்சியிலிருந்து நீக்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவு சரியென உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.