28.8 C
Jaffna
December 7, 2023
இந்தியா

தமிழகத்தில் கரையொதுங்கிய இலங்கை மர்மப்படகில் சென்றது யார்?

தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கை பைபர் படகை விட்டு விட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்கள் கடத்தல்காரர்களா, சமூக விரோதிகளா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இலங்கை பைபர் படகை விட்டு விட்டு மர்ம நபர்கள் இரண்டு பேர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

இதை அடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் இலங்கை படகை மீட்டு கடல்காரர்கள் யாரேனும் வந்தார்களா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக தப்பித்து சென்றதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே மர்ம நபர்கள் தப்பி சென்ற பகுதி கடத்தல் தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

110 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆந்திராவின் பாபட்லா அருகே கரை கடந்தது மிக்ஜாம் புயல்

Pagetamil

காதலனை தேடி இந்தியா வந்த பாகிஸ்தான் யுவதி

Pagetamil

’30 மணித்தியாலத்துக்கு மேல் மின்சாரமில்லை’: கிரிக்கெட் வீரர் அஸ்வின்

Pagetamil

அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்

Pagetamil

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!