பெண்ணின் சொத்து பறிமுதல்

Date:

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு சொந்தமாக, கண்டி குண்டசாலை மஹவத்தை பகுதியில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டசாலை பிரதேச செயலாளர் சுவீகரித்துள்ளார்.

சொத்துக்களை சம்பாதித்த விதம் தொடர்பில் குறித்த பெண் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு தெளிவான தகவல்களை வழங்கத் தவறியதால், மேல் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த மூன்று மாடிக் கட்டிடத்தையும் காணியையும் குண்டசாலை பிரதேச செயலாளரின் கீழ் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, குண்டசாலை பிரதேச செயலாளரின் முறையான அனுமதியின்றி உரிமையாளருக்கு சொத்தை மாற்றவோ, விற்கவோ அல்லது வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது.

பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், உரிய சொத்தை செயலிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்க, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்