திருகோணமலை சம்பவத்தை கண்டிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டத்துக்குரியது. மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் இனவாத கலாச்சாரம் கண்டிக்கப்பட வேண்டியது.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு, நல்லிணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, இப்படியான சம்பவங்கள் நடப்பதன் பின்னணி சந்தேகத்திற்குரியது. அரசாங்கம் கூறும் நல்லிணக்க முயற்சிகள் உண்மையாக மேற்கொள்ளப்படுமாயின், இந்த ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்க முயன்றவர்கள் முழுமையான சட்ட நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்