திருகோணமலை சம்பவத்தை கண்டிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டத்துக்குரியது. மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் இனவாத கலாச்சாரம் கண்டிக்கப்பட வேண்டியது.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு, நல்லிணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, இப்படியான சம்பவங்கள் நடப்பதன் பின்னணி சந்தேகத்திற்குரியது. அரசாங்கம் கூறும் நல்லிணக்க முயற்சிகள் உண்மையாக மேற்கொள்ளப்படுமாயின், இந்த ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்க முயன்றவர்கள் முழுமையான சட்ட நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்