29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

ஹரக் கட்டா கொடுத்த பணத்தில் தமிழர் பகுதியில் காணி வாங்கிய பொலிஸ்காரர்!

குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்து தப்பிக்கும் ஹரக்கட்டாவின் திட்டத்திற்கு உதவிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள கான்ஸ்டபிள் டுபாய்க்கு தப்பிச் சென்று சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையில் காவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு வெளியில் வரும் ஹரக்கட்டாவையும், கான்ஸ்டபிளையும் பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக பாதாள உலகக் குழுவொன்று சொகுசு வாகனத்தில் திணைக்களத் தலைமையகத்திற்கு முன்பாக காத்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிக்கும் திட்டத்துக்காகவும், அவருக்குச் செய்த அனைத்து உதவிகளுக்காகவும் ஹரக்கட்டா இந்த கான்ஸ்டபிளுக்கு அவ்வப்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது காணாமல் போயுள்ளதுடன், அவரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

ஹரக்கட்டா கொடுத்த பணத்தில் இருபது இலட்சம் ரூபாவை கான்ஸ்டபிள் தனது தாயாரிடம் இரண்டு முறை கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், திருகோணமலையில் ரூ.50 இலட்சம் பெறுமதியான நெல் வயல் மற்றும் சில சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த கான்ஸ்டபிளுக்கு மடிக்கணினி, கைத்தொலைபேசி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்களை ஹரக்கட்டா கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மடகஸ்கரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், ஹரக்கட்டா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்ததோடு, அந்தக் காலப்பகுதியில் சந்தேகநபர் கான்ஸ்டபிள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

ஹரக்கட்டா முதலில் இந்த கான்ஸ்டபிள் செய்த உதவிக்கு பதிலாக ஜப்பானுக்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதிக்கும் என நினைத்து ஹரக்கட்டா இவ்வாறான வாக்குறுதியை அளித்துள்ளார்.

ஆனால் ஹரக்கட்டாவை மீண்டும் 90 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கொந்தளித்த அவர், சிஐடி தலைமையகத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டார்.

அந்தத் திட்டத்தின்படி, பாதுகாப்புப் படையினரை சுட்டுக் கொன்றுவிட்டு சிஐடியில் இருந்து தப்பித்து டுபாய் மாநிலத்துக்குத் தப்பிச் செல்ல ஹரக்கட்டாவும் கான்ஸ்டபிளும் திட்டமிட்டனர்.

ஹரக்கட்டா தப்பிக்கும் திட்டத்தை இந்தியாவிலுள்ள ஒருவர் வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தரப்பினர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஊடாக தொலைபேசியில் பேசி, திட்டத்தை செயற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 4 பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!