97 வயதில் பௌத்த கற்கையில் முதுமாணி பட்டம் பெற்ற மூதாட்டி!

Date:

97 வயதான விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன, களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்ட நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையில் முதுமாணிப் பட்டத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவியும் அவர்தான்.

7 பாடங்களைக் கொண்ட இந்த முதுகலைப் பட்டத்திற்கு, பாலி நிகாயா கதா பௌத்த சிந்தனை – பகுப்பாய்வு மற்றும் வர்ணனை, புத்த கலை மற்றும் கட்டிடக்கலை 11 (இலங்கை) பௌத்த உளவியல், புத்த பொருளாதார தத்துவம், தேரவாத பாரம்பரியம் – வரலாறு மற்றும் தர்ம விஷயங்கள், பௌத்த நெறிமுறைகள் – கருத்துக்கள் மற்றும் தத்துவ விளக்கம், ஆராய்ச்சி முறை மற்றும் விரிவாக்கம் ஆகியவை பாடங்களில் தோற்றியுள்ளார்.

அஸ்லின் தர்மரத்ன தனது 94வது வயதில் வித்தியோதயா பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்தார்.

இவர் 6 பெண் குழந்தைகளின் தாயாராவார்.

1952 இல் இலங்கையிலில் நொத்தாரிசாக சித்தியடைந்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்