கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

Date:

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார்.

கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிசார் சென்றபோது, கசிப்பு காய்ச்சுபவர்கள் தப்பியோடினர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி தப்பியோட, பொலிஸ் உத்தியோகத்தர்களும் விரட்டிச் சென்றனர்.

சிறிது நேரத்தின் பின் 2 பொலிசார் திரும்பி வந்தபோதும், ஒருவர் திரும்பி வரவில்லை.

நேற்று இரவு வரை இராணுவம், பொலிசார் அந்த பகுதியில் பெரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று தேடுதல் நடத்தப்பட்டது. இதில் நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டது.

இச் சம்பவத்தில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த லியனகே சத்துரங்க என்வரே இறந்துள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்