26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

நாடு முழுவதும் 10,000 இற்கும் அதிக குளங்கள் முற்றாக வறண்டு விட்டன!

தற்போது நிலவும் வரட்சி காரணமாக நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட குளங்கள் முற்றாக வறண்டு விட்டதாகவும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35-40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துறைக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டின்படி, பருவமழைக்கு முன், பழுதடைந்த குளங்களை சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது என்றார்.

தற்போது நடைபெற்று வரும் எல் நினோ செயல்முறை காரணமாக, அடுத்த பருவத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், அதற்குப் பிறகு அடுத்த பருவத்தில் மீண்டும் வறண்டு இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பருவமழைக்கு முன் இந்த குளங்களை புனரமைப்பதன் மூலம் அதிக நீரைச் சேமித்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குப் பெரிதும் தீர்வு காண முடியும் என்றார் அமைச்சர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment