உலக செஸ் சம்பியனை தீர்மானிக்கும் போட்டி நாளை!

Date:

உலக செஸ் சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை (24) நடைபெற உள்ளது.

10 வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நோர்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35 வது நகர்த்தலுக்கு பிறகு முதல் சுற்று சமனிலையில் முடிந்தது.

இதையடுத்து இன்று 2 வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.

இந்நிலையில் 30 நகர்தல்களுக்குப் பிறகு இன்றைய ஆட்டமும் சமனிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்