29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

மச்சாளில் ஏற்பட்ட காதலில் 2வது உயிர்ப்பலி: இளம்பெண்ணை கொன்ற சந்தேகநபர் சிறையில் தற்கொலை!

அகுருவாதோட்டை உருதுதாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் பதினொரு மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலம் நேற்று (22) பிற்பகல் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஏ.ஏ.டி.பிரியன் மதுரங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அகுருவத்தோட்ட உருதுதாவ பிரதேசத்தில் வசிக்கின்றார். 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத பெண் குழந்தை தஸ்மி திலன்யா ஆகியோரின் படுகொலை தொடர்பில் அகுருவத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த வாசனாகுமாரியின் கணவரின் சகோதரியின் கணவரான இவர், இரணுவத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரிகிறார். வாசனாகுமாரியில் ஏற்பட்ட மயக்கத்தில், அவரை தொல்லைப்படுத்தி வந்த நிலையில், இந்த கொலை நடந்தது.

தற்கொலை செய்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!