தரையிலிருந்த இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் வைத்த மோடி!

Date:

பிரிக்ஸ் மாநாட்டில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இந்தியக்கொடி தரையில் இருப்பதை அவதானித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதை எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

15 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாபிரிக்காவில் நடந்து வருகிறது.

மாநாட்டில் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது, தென்னாபிரிக்க தலைவர் சிரில் ரமபோசாவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேடைக்கு சென்றனர்.

மேடையில் இந்திய மூவர்ண கொடி தரையில் இருப்பதை அவதானித்த நரேந்திர மோடி, அதை மிதிக்காமல்,  குனிந்து எடுத்து, தனது சட்டைப்பையில் வைத்தார்.

இதை அவதானித்த சிரில் ரமபோசா, அருகிலிருந்த மற்றைய கொடியை எடுத்தார்.

உதவியாளர் ஒருவர் விரைந்து வந்து சிரில் ரமபோசா எடுத்த கொடியை வாங்கிக் கொண்டார். மோடி எடுத்த கொடியையும் வாங்க முயன்றபோது, சிரித்தபடி அதை தவிர்த்தார்.

அத்துடன் தனது சட்டைப் பையில் கொடியை பத்திரப்படுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்