தனியார் பேருந்தில் பயணித்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் மற்றும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஜா-அல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் களுபோவில முகாமில் கடமையாற்றும் ஒருவராவார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை சிப்பாய் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




