மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் தேர்தலில் போட்டியிட தடை!

Date:

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்க மாலைதீவு உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (6) தடை விதித்தது.

ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் யாமீன் தற்போது 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு யாமீனின் மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சிக்கு (பிபிஎம்) பின்னடைவாக அமைந்ருள்ளது.

இந்த தீர்ப்பின் பின்னரும் மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சி மற்றொரு வேட்பாளரை பரிந்துரைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர் யாமீன் சிறையில் இருந்து போட்டியிடலாம் என்று நம்புகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கயூம் தாக்கல் செய்த வேட்புமனுவை, அந்த நாட்டு தேர்தல் ஆணைக்குழு நிராகரித்தது. அவர் சிறையிலிருப்பதை காரணமாக காட்டியிருந்தது. இதற்கு எதிராக மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சிக்கு கடந்த வாரம், நீதிமன்றத்தை நாடியது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அரசியலமைப்பு முன்நிபந்தனைகளை தேர்தல் ஆணைக்குழு தவறாகப் புரிந்துகொண்டதாக வாதிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்