‘என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே’: முதல் திருமண நாளில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

Date:

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டை கடந்துள்ளது. திருமண நாளை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஒரு வருடம்…. நிறைய தருணங்கள், நிறைய ஏற்ற தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனைகள் நிறைந்திருந்தது.

ஆனால் அதீத அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க வருவது நம்பிக்கையை மீட்டு தருவதோடு, அது கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க அனைத்து ஆற்றலையும் தருகிறது. என் உயிர் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறேன்.

குடும்பம் கொடுத்த பலம் எல்லாத்தையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்” என்று உருகியுள்ளார். இந்தப் பதிவுடன் நயன்தாரா மற்றும் தனது இரு மகன்கள் உயிர் மற்றும் உலக் இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் திருமண விழா கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்