அகலவத்தை தன்னாஹேன முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, தீயில் எரிந்து பூசகர் உயிரிழந்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிர்வாதன் சுந்தரகுமரன் (44) என்பவரே உயிரிழந்தார்.
கோயில் சடங்குக்காக தீ மூட்டிய போது, பூசகர் அணிந்திருந்த பட்டு ஆடையில் தீப்பற்றி, பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து முச்சக்கர வண்டியில் பிம்புர வைத்தியசாலையில் அனுமதித்து ஆரம்ப உதவிகளை வழங்கி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




